Wednesday, September 24, 2008

கனவுப்பதிவுகள்

ஹாய்... நான் ரீனா. எல்லோருக்குமே கனவுகள் உண்டு... கனவுகள் தான் நம் நிகழ்காலத்தின் நிழலாகவும் எதிர்காலத்தின் நம்பிக்கையாகவும் இருப்பவை.எனக்கும் பல கனவுகள் உண்டு. அப்படி ஒரு கனவின் நிதர்சனம் தான் இந்த BLOG...தங்களின் இனிய கனவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே! அது பகல் கனவாயினும் கூட...

கனவு மெய்ப்பட வேண்டும்



மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேன்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்
...ஒண்ணுமில்ல, பாரதியின் கவிதைகளில் எனக்கு ரொம்ப பிடிச்சது இது.. அதான் POST பண்ணிட்டேன்