Wednesday, December 17, 2008

மழைக் காலங்களில்...




குடையின்றி மழை துவங்கியது அன்று மாலை...
நடைபாதை வழியில் என்னுடன் நீ...
நாளும் இடைவெளி விட்டு நடந்து செல்லும் நம்மை
அன்று நெருங்கி வரச்செய்திருந்தது மழைச்சாரல்...
அடைமழையில் அதிவேகமாய் கடந்துச்சென்ற பலர்
விரல் கோர்த்து வெகுபொறுமையாய் நடக்கும் நமக்காய்
புருவம் உயர்த்தி ஆச்சர்யம் காட்டினர்...
யாருக்கும் புரியவே இல்லை...
அங்கே சொட்ட சொட்ட நனைந்துக் கொண்டிருந்தது காதல்தான் என்று...
அன்றைய மழை தூறிய அந்த மாலைப் பொழுதை
மனதுக்குள் பொதித்து வைத்தேன் ஒருவரும் அறியாமல்....

15 comments:

  1. \\குடையின்றி மழை துவங்கியது அன்று மாலை..\\

    அதெப்படி...

    ReplyDelete
  2. \\அங்கே சொட்ட சொட்ட நனைந்துக் கொண்டிருந்தது காதல்தான் என்று.\\

    வாவ் - சூப்பர்

    ReplyDelete
  3. \\அன்றைய மழை தூறிய அந்த மாலைப் பொழுதை
    மனதுக்குள் பொதித்து வைத்தேன் ஒருவரும் அறியாமல்....\\

    அருமை

    ReplyDelete
  4. //யாருக்கும் புரியவே இல்லை...
    அங்கே சொட்ட சொட்ட நனைந்துக் கொண்டிருந்தது காதல்தான் என்று...//

    ரொம்ப நல்லா இருக்கு கவிதை...

    ReplyDelete
  5. காதலின் உணவுகளை சொன்ன விதம் அழகு.

    கொஞ்சம் allignment பாத்துக்கோங்க ரீனா.

    ReplyDelete
  6. //யாருக்கும் புரியவே இல்லை...
    அங்கே சொட்ட சொட்ட நனைந்துக் கொண்டிருந்தது காதல்தான் என்று...//


    மெல்லிய உணர்வுகளை மிக அழகான வரிகளுக்குள் புதைத்து வைத்திருக்கிறீர்கள்... அருமை... !!!

    ReplyDelete
  7. அதிரை ஜமால் said...

    "மழைக் காலங்களில்..."

    ரீனா said...
    "வாங்க ஜமால்"

    ReplyDelete
  8. அதிரை ஜமால் said...

    \\குடையின்றி மழை துவங்கியது அன்று மாலை..\\
    ரீனா said..

    \\கையில் குடை இல்லாத போது மழை தொடங்கியதுனு சொல்ல வந்தேன்//

    ReplyDelete
  9. அதிரை ஜமால் said...

    \\அன்றைய மழை தூறிய அந்த மாலைப் பொழுதை
    மனதுக்குள் பொதித்து வைத்தேன் ஒருவரும் அறியாமல்....\\

    அருமை

    ரீனா said...
    \\தங்கள் தருகை மகிழ்ச்சி அளிக்கிறது\

    ReplyDelete
  10. புதியவன் said...

    //யாருக்கும் புரியவே இல்லை...
    அங்கே சொட்ட சொட்ட நனைந்துக் கொண்டிருந்தது காதல்தான் என்று...//

    ரொம்ப நல்லா இருக்கு கவிதை...

    ரீனா said..
    \\நன்றி புதியவன்\\

    ReplyDelete
  11. அருள் said...

    காதலின் உணவுகளை சொன்ன விதம் அழகு.

    கொஞ்சம் allignment பாத்துக்கோங்க ரீனா

    ரீனா said...
    \\சரிங்க அருள்.. \\

    ReplyDelete
  12. நவீன் ப்ரகாஷ் said...
    //மெல்லிய உணர்வுகளை மிக அழகான வரிகளுக்குள் புதைத்து வைத்திருக்கிறீர்கள்... அருமை... !!!//

    ரீனா said..
    //நன்றி நவீன் ப்ரகாஷ் சார்//

    ReplyDelete
  13. கவிதை அருமை:))

    வாழ்த்துக்கள் ரீனா!!

    ReplyDelete
  14. A lovely poem and truly romantic :) way to go :)

    ReplyDelete