Thursday, February 19, 2009

முத்த களம்


உன் முத்தங்களுடன் தான்
தூங்கப்போவேன்
என்று அடம் பிடிக்கும் மனதுக்கு
எத்தனை சொன்னாலும் புரிவதில்லை
உன் முத்தங்கள்
தூக்கம் தொலைக்க
செய்பவை என்று...

நுதலினின்று நீளும்
உன் முத்தங்களில்
நிறைந்து போகின்றது
என் தேடல்கள்...


சத்தமின்றி சில சமயம்
சத்தத்துடன் சில சமயம்
என சிலிர்க்கும் முத்தங்கள்
உனக்கு மட்டுமே சாத்தியம்...


வன்தடங்கள் பதிக்கும்
வல்லமை இருக்கிற்து
உன் மென்முத்தங்க‌ளுக்கு கூட...



என் வெட்கங்கள்
வருகை தரவும்
விலகி செல்லவும்
காரணமாய் இருப்பவை
உன் முத்தங்கள் தான்
என்று நீ அறிவாயா?


இடைவெளி இல்லாமல்
முத்தம் கொடுக்கிறாய்...
மூச்சிரைக்கிறதாம் காதலுக்கு...

32 comments:

  1. நீண்ட இடைவெளிக்கு பின்

    களத்தில் அதுவும் முத்தத்தோடு ...

    ReplyDelete
  2. \\உன் முத்தங்களுடன் தான்
    தூங்கப்போவேன்
    என்று அடம் பிடிக்கும் மனதுக்கு
    எத்தனை சொன்னாலும் புரிவதில்லை
    உன் முத்தங்கள்
    தூக்கம் தொலைக்க
    செய்பவை என்று...\\

    ஆஹா ஆஹா அருமை அருமை

    ReplyDelete
  3. \\நுதலினின்று நீளும்
    உன் முத்தங்களில்
    நிறைந்து போகின்றது
    என் தேடல்கள்... \\

    அருமையான

    அழகான சொல்லாடல் ...

    ReplyDelete
  4. உன் முத்தங்களுடன் தான்
    தூங்கப்போவேன்
    என்று அடம் பிடிக்கும் மனதுக்கு
    எத்தனை சொன்னாலும் புரிவதில்லை
    உன் முத்தங்கள்
    தூக்கம் தொலைக்க
    செய்பவை என்று.////

    ஆஹா ஆஹா!
    நம்ம சொல்றதை மனம் எங்கே கேக்குது.

    ReplyDelete
  5. நுதலினின்று நீளும்
    உன் முத்தங்களில்
    நிறைந்து போகின்றது
    என் தேடல்கள்..///

    வார்த்தைகள் அழகு!!!
    ரசித்தேன்
    தேவா..

    ReplyDelete
  6. இடைவெளி இல்லாமல்
    முத்தம் கொடுக்கிறாய்...
    மூச்சிரைக்கிறதாம் காதலுக்கு...
    //
    நல்லாயிருக்கு, கவிதை முழுதும்!

    தேவா..
    http://abidheva.blogspot.com/2009/02/10.html

    ReplyDelete
  7. நித்தம் எழுதின முத்தக் கவிதைகளா!

    மிக நன்றாகவே இருக்கின்றன.

    திரட்டியில் பார்த்தேன் உங்கள் பதிவை. எப்படி அங்கே நீங்கள் உங்கள் பதிவை இணைத்தீர்கள்?

    ஷீ-நிசி

    ReplyDelete
  8. என சிலிர்க்கும் முத்தங்கள்

    உன் மென்முத்தங்க‌ளுக்கு கூட


    இரசித்தேன்

    ReplyDelete
  9. என் வெட்கங்கள்
    வருகை தரவும்
    விலகி செல்லவும்
    காரணமாய் இருப்பவை
    உன் முத்தங்கள் தான்
    என்று நீ அறிவாயா?

    இடைவெளி இல்லாமல்
    முத்தம் கொடுக்கிறாய்...
    மூச்சிரைக்கிறதாம் காதலுக்கு...

    ரொமாண்டிக்

    ReplyDelete
  10. கவிஞரே, சூப்பர்ர்ர்! நல்ல இருக்கு! ஒவ்வொன்றும் ரசித்து ரசித்து எழுது இருக்கீங்க...!:)

    ReplyDelete
  11. காதலுக்கு மூச்சிரைப்பதாகச் சொல்லி முத்தத்தை நிறுத்தினாலும், உங்கள் கவிதையை தொடரவும். உங்கள் கவிதைகள் அனைத்தும் கற்கண்டு.

    ReplyDelete
  12. இன்று தான் முதல் முதலாய் இங்கு வருகிறேன்..... எல்லா கவிதைகளுமே அருமை தோழியே....

    நட்புடன்,
    ரவிஷ்னா

    ReplyDelete
  13. நட்புடன் ஜமால் said...
    //நீண்ட இடைவெளிக்கு பின்
    களத்தில் அதுவும் முத்தத்தோடு ...//

    ரீனா said...
    //:))) வாங்க ஜமால்... அழகான தருகைகள்... எப்போ புதுசா பதிவுகள் போட்டாலும் தங்கள் தவறாத வருகையும் தருகைகளும் மகிழ்ச்சி அளிக்கிறது...//

    ReplyDelete
  14. thevanmayam said...
    //உன் முத்தங்களுடன் தான்
    தூங்கப்போவேன்
    என்று அடம் பிடிக்கும் மனதுக்கு
    எத்தனை சொன்னாலும் புரிவதில்லை
    உன் முத்தங்கள்
    தூக்கம் தொலைக்க
    செய்பவை என்று.////

    //ஆஹா ஆஹா!
    நம்ம சொல்றதை மனம் எங்கே கேக்குது.//

    ரீனா said..
    //:))) உண்மை தாங்க... வருகைக்கு மிக்க நன்றி தேவன்//

    ReplyDelete
  15. //ஷீ-நிசி said...
    நித்தம் எழுதின முத்தக் கவிதைகளா!

    மிக நன்றாகவே இருக்கின்றன.

    திரட்டியில் பார்த்தேன் உங்கள் பதிவை. எப்படி அங்கே நீங்கள் உங்கள் பதிவை இணைத்தீர்கள்?

    ஷீ-நிசி//

    ரீனா said...
    //நன்றி ஷீ‍-நிசி... திரட்டியில் உங்கள் பதிவை சேர்த்து விட்டால் போதும். முகப்பு பக்கத்திலேயே அதற்கான வழிமுறைகள் இருக்கும்//

    ReplyDelete
  16. //கிஷோர் said...
    அட்டகாசம் :)//

    ரீனா said...
    நன்றி கிஷோர்:)))

    ReplyDelete
  17. Thamizhmaangani said...
    கவிஞரே, சூப்பர்ர்ர்! நல்ல இருக்கு! ஒவ்வொன்றும் ரசித்து ரசித்து எழுது இருக்கீங்க...!:)

    ரீனா said...
    வாங்க மேடம்ஜி... உங்களோட கவிதைகள்லாம் சான்சே இல்லப்பா.. தங்கள் வருகை பெருமை அளிக்கிறது

    ReplyDelete
  18. Hi Reena..

    Ungalin Mutha kalam en manathil porkalathai yerppaduthiyadhu!!!!!

    Anaithum miga azhgana varigal.....

    KANNAN

    ReplyDelete
  19. ரீனா...
    களம் முத்தங்களை களவு செய்த்து போதாதென களவு செய்கிறது மனதையும்.... :))

    ச‌த்த‌ம் ம‌ட்டும் தான் இல்லை... ப‌டிக்க‌ ப‌டிக்க‌
    மொத்தமாய் முத்தியெடுக்கிற‌து ஒவ்வொரு க‌விதையும்... :)))


    மிக‌வும் ர‌சித்தேன்... !!! :)))

    ReplyDelete
  20. //உன் முத்தங்களுடன் தான்
    தூங்கப்போவேன்
    என்று அடம் பிடிக்கும் மனதுக்கு
    எத்தனை சொன்னாலும் புரிவதில்லை
    உன் முத்தங்கள்
    தூக்கம் தொலைக்க
    செய்பவை என்று...//

    Simply Cute... !!

    //நுதலினின்று நீளும்
    உன் முத்தங்களில்
    நிறைந்து போகின்றது
    என் தேடல்கள்... //

    நுதல் = நெற்றி..?? :)))

    அழகிய தமிழ் வார்த்தைச் சூடல்...!!

    //சத்தமின்றி சில சமயம்
    சத்தத்துடன் சில சமயம்
    என சிலிர்க்கும் முத்தங்கள்
    உனக்கு மட்டுமே சாத்தியம்...//

    ஆஹா... சாத்தியமில்லாதபோதும்
    சத்தமில்லாமல் கொடுக்க முடியும்
    முத்தங்களின் அழகே தனிதான்..!! :)))

    //வன்தடங்கள் பதிக்கும்
    வல்லமை இருக்கிற்து
    உன் மென்முத்தங்க‌ளுக்கு கூட... //

    ஹேய்... வன் தடங்கள் கூட பதிக்குமா
    மென் முத்தங்கள்...??? :)))

    கலக்கலான கற்பனை ரீனா...!! :)))

    //என் வெட்கங்கள்
    வருகை தரவும்
    விலகி செல்லவும்
    காரணமாய் இருப்பவை
    உன் முத்தங்கள் தான்
    என்று நீ அறிவாயா? //

    என்ன சொல்ல..?

    ரசித்த்த்த்த்தேன்...:))))

    //இடைவெளி இல்லாமல்
    முத்தம் கொடுக்கிறாய்...
    மூச்சிரைக்கிறதாம் காதலுக்கு...//

    அச்சச்சோ... அப்படியாகிப்போச்சா..?
    :)))

    யுத்தம் செய்கின்றன முத்தங்கள் இந்தக் களத்தில்... !!!

    ReplyDelete
  21. //உன் முத்தங்களுடன் தான்
    தூங்கப்போவேன்
    என்று அடம் பிடிக்கும் மனதுக்கு
    எத்தனை சொன்னாலும் புரிவதில்லை
    உன் முத்தங்கள்
    தூக்கம் தொலைக்க
    செய்பவை என்று...//

    அழகு...

    //என் வெட்கங்கள்
    வருகை தரவும்
    விலகி செல்லவும்
    காரணமாய் இருப்பவை
    உன் முத்தங்கள் தான்
    என்று நீ அறிவாயா? //

    ரொம்ப அழகு...

    //இடைவெளி இல்லாமல்
    முத்தம் கொடுக்கிறாய்...
    மூச்சிரைக்கிறதாம் காதலுக்கு...//

    ரொம்ப ரொம்ப அழகு...

    மிகவும் ரசித்தேன்
    முத்த களம் மொத்தமும் அழகு...

    ReplyDelete
  22. // Kannan said...
    Hi Reena..

    Ungalin Mutha kalam en manathil porkalathai yerppaduthiyadhu!!!!!

    Anaithum miga azhgana varigal.....

    KANNAN//

    ரீனா said...

    //நன்றி கண்ணன்... தங்கள் வருகைக்கும் அழகான தருகைக்கும்:))))//

    ReplyDelete
  23. //'தும்பி' said...

    காதலுக்கு மூச்சிரைப்பதாகச் சொல்லி முத்தத்தை நிறுத்தினாலும், உங்கள் கவிதையை தொடரவும். உங்கள் கவிதைகள் அனைத்தும் கற்கண்டு.//

    ரீனா said..
    //அப்படியா தும்பி:))) சரி தொடருகிறேன். தங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது//

    ReplyDelete
  24. //Ravishna said...
    இன்று தான் முதல் முதலாய் இங்கு வருகிறேன்..... எல்லா கவிதைகளுமே அருமை தோழியே....

    நட்புடன்,
    ரவிஷ்னா//

    ரீனா said...
    //நன்றி ரவிஷ்னா... தங்கள் வாழ்த்து உற்சாகம் அளிக்கிறது//

    ReplyDelete
  25. //ரசிகன்பாலு said...
    wow great kisses//

    ரீனா said...
    நன்றி பாலு சார்:))

    ReplyDelete
  26. நவீன் ப்ரகாஷ் said...
    //ரீனா...
    களம் முத்தங்களை களவு செய்த்து போதாதென களவு செய்கிறது மனதையும்.... :))//

    ரீனா said...
    வாங்க நவீன் ஜி... களம் மனதை களவாடியதா? :))) நன்றி...

    நவீன் ப்ரகாஷ் said...

    //ச‌த்த‌ம் ம‌ட்டும் தான் இல்லை... ப‌டிக்க‌ ப‌டிக்க‌
    மொத்தமாய் முத்தியெடுக்கிற‌து ஒவ்வொரு க‌விதையும்... :)))//

    ரீனா said..
    //அப்படியா என்ன?//

    நவீன் ப்ரகாஷ் said...

    //மிக‌வும் ர‌சித்தேன்... !!! :)))//

    ரீனா said...
    நன்றி கவிஞரே.. எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்

    ReplyDelete
  27. நவீன் ப்ரகாஷ் said...

    //நுதலினின்று நீளும்
    உன் முத்தங்களில்
    நிறைந்து போகின்றது
    என் தேடல்கள்... //

    நுதல் = நெற்றி..?? :)))

    அழகிய தமிழ் வார்த்தைச் சூடல்...!! //

    ரீனா said...

    //நன்றி நவீன் ஜி.. எல்லாம் உங்க கவிதைகளை பார்த்து கத்துக்கிட்டது தான்..//

    ReplyDelete
  28. புதியவன் said...
    //உன் முத்தங்களுடன் தான்
    தூங்கப்போவேன்
    என்று அடம் பிடிக்கும் மனதுக்கு
    எத்தனை சொன்னாலும் புரிவதில்லை
    உன் முத்தங்கள்
    தூக்கம் தொலைக்க
    செய்பவை என்று...//

    அழகு...


    ரீனா said...
    //வாங்க புதியவன்:))) நன்றி//

    புதியவன் said...
    //என் வெட்கங்கள்
    வருகை தரவும்
    விலகி செல்லவும்
    காரணமாய் இருப்பவை
    உன் முத்தங்கள் தான்
    என்று நீ அறிவாயா? //

    ரொம்ப அழகு...


    ரீனா said...

    //ரொம்ப நன்றி
    :))//

    புதியவன் said...
    //இடைவெளி இல்லாமல்
    முத்தம் கொடுக்கிறாய்...
    மூச்சிரைக்கிறதாம் காதலுக்கு...//

    ரொம்ப ரொம்ப அழகு...

    மிகவும் ரசித்தேன்
    முத்த களம் மொத்தமும் அழகு...//


    ரீனா said...
    //ரொம்ப ரொம்ப நன்றி!!! புதியவன்.. தங்கள் வருகை இன்னும் அழகு சேர்த்து விட்டது களத்திற்கு//

    ReplyDelete
  29. //இடைவெளி இல்லாமல்
    முத்தம் கொடுக்கிறாய்...
    மூச்சிரைக்கிறதாம் காதலுக்கு...//


    அழகு...

    ReplyDelete
  30. அட ஓவர் ஈஸ்பட்டேசனோட படிக்க ஆரம்பிச்சேன்

    ReplyDelete