
இப்போது வலையுலகில் சுவாரஸ்யமாய் ஓடிக் கொண்டிருக்கும் சுவாரஸ்ய வலைபதிவர் விருது வைபவத்தில் என்னையும் கூட சேர்த்து விட்டிருக்கிறார் பதிவர் சக்தி அவர்கள்(ஹி ஹி ஹி..) நன்றி சக்தி. இது உண்மையிலேயே என்னை ஊக்கப்படுத்துகிறது. இத்னை தொடங்கி வைத்த செந்தழல் ரவி அவர்களுக்கும் நன்றி.
இன்னும் அறுவருக்கு இந்த விருதை நான் அளிக்கலாமாம். நான் பரிந்துரைக்கும் அறுவர்...
1. புதியவன் http://puthiyavanonline.blogspot.com/
மிக அழகாக காதல் கவிதைகள் எழுதுபவர். உயர்காதலை கருவாக, தன் காதலியை மட்டுமே கருப்பொருளாய் கொண்டு அருமையான கவிதைகளை தருபவர். உங்கள் காதலும் கவிதைகளும் இப்போது போல் எப்போதும் செழிப்பாய் வளர வாழ்த்துக்கள் புதியவன்.
2. வருத்தப்படாத வாலிபர் சங்கம் http://www.vvsangam.com/
சீரியஸாக பலப்பதிவர்கள் எழுதிக்கொண்டிருக்க சிரிக்க வைப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் ஒரு வலைப்பூ. சிபி, சிவா, கைபுள்ள, ஜொள்ளுப்பாண்டி,இளா, தேவ் என பலர் சேர்ந்து அமைத்த சங்கத்தில் மாதம் ஒருவரை அட்லாஸ் சிங்கமாக தேர்வு செய்து எழுத வைத்து பல பணிகளுக்கு நடுவில் சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி கொண்டுள்ளனர்(இதுவே ரொம்ப பெரிய விஷயமாச்சே). எனவே இந்த விருது இவர்களது சங்கத்து சிங்கங்கள் ஒவ்வொருக்கும் தனியாகவும், மொத்தமாக இவர்கள் சங்கத்துக்கும் தரப்படுகிறது. இவர்களது பணி தொடர வாழ்த்துக்கள்.
3.கரையோரக்கனவுகள் ஸ்ரீமதி http://karaiyoorakanavugal.blogspot.com/
மெல்லிய வலியை சொல்லும் காதல் கவிதைகளை எழுதுபவர். பின்னூட்டமிடும் பதிவர்களை 'அண்ணா அக்கா' என அழைத்து காலி செய்பவர். இவரது கவிதைகள் ஒவ்வொன்றுமே மிக அழகானவை. தொடர்ந்து பல காதல் கவிதை புனைய வாழ்த்துக்கள்
4.மனசுக்குள் மத்தாப்பூ திவ்யா http://manasukulmaththaapu.blogspot.com/
திவ்யா காதல் கதைகள் எழுதுவதில் வல்லவர். இவரது கதைகள் படிக்க, திரைக்கதைகளுக்கு நிகராக, அத்தனை சுவாரஸியமாக இருக்கும். கதைக்கு பொருத்தமான படங்களை எப்படித்தான் தேடிப்பிடிப்பாரோ தெரியாது.கதை நெடுக அழகிய கவிதைகள் வேறு இருக்கும். இவரது கதைகளை படித்துத்தான் எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்கும் ஆசை வந்தது. நீங்கள் இன்னும் பல அழகான கதைகள் படைக்க வாழ்த்துக்கள் திவ்யா
5. நட்புடன் ஜமால் http://adiraijamal.blogspot.com/
ஜமாலின் வலைப்பூவை காட்டிலும் மிக பிரசித்தியானவை அவரது பின்னூட்டங்கள். மிக அதிகமான வலைப்பூக்களில் இவரது பின்னூட்டங்களை காணலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எவர் மனமும் நோகாமல்,படைப்பை மட்டுமே விமர்சித்து, பாரபட்சமின்றி பின்னூட்டம் இடுவார். அது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல. எனவே ஜமால் உங்களுக்கு இந்த விருது. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
6. மை தாட்ஸ் டா மச்சி காயத்ரி http://enpoems.blogspot.com/
க்தை, கவிதை, திரை விமர்சனம், தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் என ஒரு தளத்தில் நிற்காமல் பலவற்றில் பரிணமிப்பவர் த்மிழ்மாங்கனி என்ற காயத்ரி. மிக ஜாலியான வலைப்பூ இவருடையது. பல பல திறமைகள் உடையவர் இவர். மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள் காயத்ரி
அறுவர் என்பதால் மட்டுமே பட்டியல் இத்துடன் நிறுத்தப்படுகிறது. ஏனென்றால் சுவாரஸிய பதிவர்கள் நிறைய பேர் உள்ளனர். அத்தனை பேருக்கும் என் பணிவான வாழ்த்துக்கள்